Thursday, July 9, 2020

4 மாதமாக நரக வேதனை.. இருட்டு அறையில் சித்ரவதை.. போலீசும், டாக்டரும் செய்த கொடூரம்.!!

ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரமித்தாராபூர் பகுதியில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி 14 வயது சிறுமி அங்கு நடைபெற்ற கண்காட்சியை காண வந்துள்ளார். இந்நிலையில், அன்று இரவு இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதனால் ஊருக்கு செல்ல வழியில்லாமல் நின்ற சிறுமியை கவனித்த அப்பகுதி இன்ஸ்பெக்ட்டர், பாதுகாப்பு தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த நான்கு மாதமாக சிறுமியை மறைமுகமாக வைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி தற்போது கர்ப்பமடையவே, இதனை அறிந்த காவல் அதிகாரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து சென்று தனது பதவியை வைத்து கருக்கலைப்பு செய்துள்ளார். கருக்கலைப்பு செய்த பின்னர் சிறுமி எப்படியோ தப்பித்து தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.
அங்கு தனது பெற்றோர்களிடம் நடந்ததை கூறவே, பெற்றோர்கள் அங்குள்ள எஸ்.பியிடம் புகார் அளித்துள்ளனர். எஸ்.பியின் உத்தரவின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் கருக்கலைப்பு செய்த அரசு டாக்டர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: