Sunday, June 28, 2020

குழுமி நிற்கும் சீனப்படை; ரவுண்டு கட்டும் இந்தியப்படை!!

Webdunia :குழுமி நிற்கும் சீனப்படை; ரவுண்டு கட்டும் இந்தியப்படை!!
புதிய கட்டடங்களை காட்டும் புகைப்படம்
லடாக் எல்லை பகுதியில் இந்தியா - சீனா தனது படைகளை அதிகரித்துக்கொண்டே வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா- சீனா படைகள் லடாக் எல்லையில் மோதலில் ஈடுப்பட்டன. இதில் இரு தரப்பிலும் உயிர் சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இதற்கு சுமூக முடிவு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் லடாக் பகுதியில் சீனா தனது படைகளை அதிகரித்து வருகிறது. ஹெலிகாப்டர் இறங்குதளத்தை அமைத்து வருகிறது, இதனால், இந்தியாவும் தனது பங்கிறகு விமானப்படையை களமிறக்கியுள்ளது. சுமார் 40 விமானங்கள் வட்டமிட்டு வருகின்றனர்.
எல்லையில் நிலவும் அச்சுறுத்தலால் சீனாவுக்கு நிகராக இந்தியாவும் படைகள் இறக்கி பலத்தை அதிகரித்து வருகிறது.

SHARE THIS

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 Comments: